ADDED : அக் 01, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், சென்ட்ரல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சிலர் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி விற்பனை செய்வது குறித்து தனிப்படையினருக்கு தெரிந்தது.
இதுதொடர்பாக, போலீசார் நேற்று கண்காணித்து, சந்தேகப்படும் வகையில், 3 பேரிடம் விசாரித்தனர். அதில், திருப்பூர், கே.என்.எஸ்., நகரை சேர்ந்த அசோக்குமார், 24, ஆண்டிபாளையத்தை சேர்ந்த வல்லரசு, 28 மற்றும் வஞ்சிபாளையத்தை சேர்ந்த பிரபாகரன், 36 என, மூன்று பேரை கைது செய்து, இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.