sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி விவசாயிகள் சாலை மறியல்

/

நாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி விவசாயிகள் சாலை மறியல்

நாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி விவசாயிகள் சாலை மறியல்

நாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி விவசாயிகள் சாலை மறியல்


ADDED : செப் 20, 2024 01:47 AM

Google News

ADDED : செப் 20, 2024 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், காங்கேயம், ஊதியூர், மூலனுார், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களால் கால்நடைகள் வேட்டையாடப்படுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த, 13ம் தேதி மறவம்பாளையத்தில் பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள், ஆடுகளை துரத்தியதில், 40 அடி ஆழ கிணற்றில் விழுந்து, 17 ஆடுகள் இறந்தன.

இந்நிலையில், காங்கேயம், தொட்டியபட்டியை சேர்ந்த மோகன்குமார், 62, என்பவர், 70 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, ஆடுகளை பட்டியில் அடைத்து சென்றார். நேற்று காலை பார்த்தபோது, 16 செம்மறி ஆடுகள், குட்டி உட்பட, 30 ஆடுகள் இறந்து கிடந்தன. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த, பத்து ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆவேசமடைந்த விவசாயிகள், காங்கேயத்தில் நேற்று, இறந்த ஆடுகளை சாலையில் கிடத்தி, மறியலில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகள், விவசாயிகளிடம் பேச்சு நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்ததால், விவசாயிகள் கலைந்தனர்.






      Dinamalar
      Follow us