sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ஒரு வீட்டுக்காக 4 தெருவிளக்கா?

/

 ஒரு வீட்டுக்காக 4 தெருவிளக்கா?

 ஒரு வீட்டுக்காக 4 தெருவிளக்கா?

 ஒரு வீட்டுக்காக 4 தெருவிளக்கா?


ADDED : டிச 25, 2025 05:53 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: பல்லடம் ஒன்றியம், கரடிவாவி ஊராட்சி, கரடிவாவிப்புதுாரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 48. இவர், கலெக்டரிடம் அளித்த புகார்:

கரடிவாவி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் மாரிமுத்து (தி.மு.க.) என்பவரின் வீட்டைச் சுற்றி நான்கு தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவரது வீட்டின் அருகே, வேறு வீடுகள், கடைகள் எதுவும் கிடையாது. ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், போதிய தெரு விளக்கு வசதிகள் இல்லாத நிலையில், ஒரே ஒரு வீட்டுக்காக, நான்கு தெருவிளக்கு அமைத்தது ஏன்? மின் வாரியம் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், ஒரு தனி நபருக்காக நான்கு தெரு விளக்குகள் அமைத்துள்ளதால், அரசுக்கு மட்டுமன்றி, பொதுமக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரித்து, மக்கள் வரிப்பணம் வீணாவதை தடுப்பதுடன், விதிமுறை மீறி தெருவிளக்குகள் அமைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊராட்சி செயலர் சுமதியிடம் கேட்டபோது, ''இதுதொடர்பாக பி.டி.ஓ. மற்றும் மண்டல பி.டி.ஓ. ஆகியோரிடம் தெரிவித்துள்ளேன். நேரில் ஆய்வு செய்த பின் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்'' என்றார்.






      Dinamalar
      Follow us