ADDED : அக் 19, 2024 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: 'போக்சோ' வழக்கில், கூலி தொழிலாளிக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பல்லடம் பகுதியைச் சேர்ந்த 38 வயது கூலி தொழிலாளி. இவர் 13 வயதுடைய தனது வளர்ப்பு மகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.இது குறித்து சிறுமியின் தாய் பல்லடம் மகளிர் போலீசில் புகார் செய்தார். கடந்த 2023 ம் ஆண்டில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.திருப்பூர் மகிளா கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜரானார். இதில், குற்றம் சாட்டப்பட்ட வளர்ப்பு தந்தைக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார்.