sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அதிகரிக்கும் பசுமைப்பரப்பு அய்யன் தோட்டத்தில் 500 மரக்கன்று

/

அதிகரிக்கும் பசுமைப்பரப்பு அய்யன் தோட்டத்தில் 500 மரக்கன்று

அதிகரிக்கும் பசுமைப்பரப்பு அய்யன் தோட்டத்தில் 500 மரக்கன்று

அதிகரிக்கும் பசுமைப்பரப்பு அய்யன் தோட்டத்தில் 500 மரக்கன்று


ADDED : ஜன 11, 2025 09:29 AM

Google News

ADDED : ஜன 11, 2025 09:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : மூலனுார், அடுத்துள்ள மூலப்பாளையத்தில், 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், 500 மரக்கன்றுகள் நடப்பட்டது.

'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, 3.50 லட்சம் மரக்கன்றுகளை கடந்து, தொடர்ந்து மரக்கன்று நடவு நடந்து வருகிறது. இந்நிலையில், மூலனுார் பகுதி விவசாயிகள், மரம் வளர்ப்பில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

மூலனுார் அடுத்துள்ள மூலப்பாளையத்தில், மூலை வீட்டு குப்புசாமி அய்யன் தோட்டத்தில் நேற்று மரக்கன்று நடப்பட்டது. மகோகனி - 450, தேக்கு -50 என, 500 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us