ADDED : டிச 01, 2024 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிகரங்கள் அறக்கட்டளை சார்பில், 86வது ரத்ததான முகாம், இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் ஆகியவை அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மருத்துவ குழுவினர் 54 யூனிட் ரத்தம் சேகரித்தனர்.
ரத்த கொடையாளர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஐ பவுண்டேசன் மருத்துவமனை சார்பில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் 180 பேர் கண் பரிசோதனை செய்து கொண்டனர். ரேவதி மெடிக்கல் சென்டர் சார்பில் நடந்த பொது மருத்துவ முகாமில், 105 பேர் பங்கேற்று உடல் பரிசோதனை செய்து கொண்டனர். ஏற்பாடுகளை சிகரம் அறக்கட்டளை தலைவர் காமராஜ், துணைத்தலைவர் சங்கர், ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், பரத் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.