/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொண்டத்து காளியம்மன் கோவிலில் ரூ.5.40 கோடியில் திருமண மண்டபம்
/
கொண்டத்து காளியம்மன் கோவிலில் ரூ.5.40 கோடியில் திருமண மண்டபம்
கொண்டத்து காளியம்மன் கோவிலில் ரூ.5.40 கோடியில் திருமண மண்டபம்
கொண்டத்து காளியம்மன் கோவிலில் ரூ.5.40 கோடியில் திருமண மண்டபம்
ADDED : நவ 14, 2024 04:54 AM

அனுப்பர்பாளையம்: பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் திருமண மண்டபம் கட்ட அறநிலையத்துறை சார்பில், 5 கோடியே 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருமண மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ரத்னவேல் பாண்டியன், உதவி ஆணையர் தனசேகரன், செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன், தி.மு.க., மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், கே.எம்.சி., பப்ளிக் பள்ளி தாளாளர் மனோகரன், கணக்கம் பாளையம் ஊராட்சி தலைவர் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கட்டப்படவுள்ள திருமண மண்டபம், 26 சென்ட் இடத்தில், கீழ் தளத்தில் உணவு கூடம், முதல் தளத்தில், 300 பேர் அமரக்கூடிய வகையில் திருமண கூடம், லிப்ட் மற்றும் பார்க்கிங் வசதியுடன் கட்டப்படுகிறது.
18 மாதத்தில் கட்டட பணி முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.