sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

56 தலைமை ஆசிரியர் விவரங்கள் சேகரிப்பு

/

56 தலைமை ஆசிரியர் விவரங்கள் சேகரிப்பு

56 தலைமை ஆசிரியர் விவரங்கள் சேகரிப்பு

56 தலைமை ஆசிரியர் விவரங்கள் சேகரிப்பு


ADDED : மே 26, 2025 11:46 PM

Google News

ADDED : மே 26, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்,; பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சியை பெற்றுத்தந்த, 56 பள்ளி தலைமை ஆசிரியர் விபரங்கள் பள்ளி கல்வித்துறைக்கு பட்டியலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த, 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. இதில், 97.53 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்றது. 18 அரசு பள்ளிகள் நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சியை பெற்று அசத்தின. 16ம் தேதி வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், திருப்பூர், 17 வது இடம் பெற்றது; 38 அரசு பள்ளிகள் நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சி பெற்றன.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற 56 பள்ளிகள், மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, அப்பள்ளி தலைமை ஆசிரியர் செயல்பாடு குறித்த பட்டியல் சேகரித்து, சென்னை பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை எட்டிய பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் சென்டம் பெற்ற பெற்றுத் தந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் விபரம் சேகரித்து அனுப்பப்பட்டுள்ளது. பாராட்டுச் சான்றிதழ் வழங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us