sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உரிய ஆவணமின்றி தங்கியிருந்த வங்க தேசத்தினர் 6 பேர் கைது

/

உரிய ஆவணமின்றி தங்கியிருந்த வங்க தேசத்தினர் 6 பேர் கைது

உரிய ஆவணமின்றி தங்கியிருந்த வங்க தேசத்தினர் 6 பேர் கைது

உரிய ஆவணமின்றி தங்கியிருந்த வங்க தேசத்தினர் 6 பேர் கைது


ADDED : செப் 25, 2024 08:07 PM

Google News

ADDED : செப் 25, 2024 08:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூரில் 15 நாட்களாக முறைகேடாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் நகரில் வடமாநிலத்தினர் போர்வையில் வங்க தேசத்தினர் ஊடுருவல் தொடர்பாக மாநகர போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் தெற்கு போலீசார் மற்றும் அதிவிரைவு படையினர் நேற்று முன் தினம் மத்திய பஸ் ஸ்டாண்டில் திரிந்த வடமாநிலத்தினரிடம் விசாரித்தனர்.

ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். ஆறு பேரிடம் இருந்த ஆவணங்கள் போலி என்பதும், அவர்கள் வங்கதேசத்தினர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆறு பேரையும் தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அசாம் மாநிலம் குவாஹத்தி வழியாக சென்னை வந்து அங்கிருந்து ரயிலில் திருப்பூக்கு வந்துள்ளனர். ஊத்துக்குளி அருகே பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், ஆறு பேரையும் பனியன் நிறுவன உரிமையாளர் வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்.

இதனால், பல்லடத்துக்கு செல்ல திட்டமிட்டு, மத்திய பஸ் ஸ்டாண்ட் வந்துள்ளனர். வங்கதேசத்தைச் சேர்ந்த தன்வீர், 39, ரசிப்தவுன், 43, முகமது அஸ்லம், 41, முகமது அல் இஸ்லாம், 37, முகமது ராகுல் அமின், 30, மற்றும் சவுமுன் ஷேக், 38, என, ஆறு பேரையும் திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us