/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுவாசிக்க போராடியவருக்கு 6 மணி நேர அறுவை சிகிச்சை
/
சுவாசிக்க போராடியவருக்கு 6 மணி நேர அறுவை சிகிச்சை
சுவாசிக்க போராடியவருக்கு 6 மணி நேர அறுவை சிகிச்சை
சுவாசிக்க போராடியவருக்கு 6 மணி நேர அறுவை சிகிச்சை
ADDED : பிப் 02, 2026 05:10 AM

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில், கடுமையான மூச்சுத்திணறலால், அவதிப்பட்ட நோயாளியை அனுமதித்து பரிசோதித்ததில், அவரது மூச்சு குழாயை இரு பக்கங்களிலும், மிகப்பெரிய கட்டி அழுத்தி கொண்டிருப்பது தெரியவந்தது.
ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவரை, நுரையீரல் மருத்துவர் அருண்கங்காதர், மூத்த இருதய மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராம்பிரசாத், மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் விக்ரம்முத்துசுப்ரமணியன், மருத்துவர்கள் நரேந்திரமேனன், மணிகண்டன், அசோக்ஹரிஹரன் உள்ளடக்கிய குழுவினர் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர்.
இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, நோயாளி விரைவாக குணமடைந்தார். சவாலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்த மருத்துவர்கள் குழுவினர்களை, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மருத்துவர் சுந்தர்ராமகிருஷ்ணன், அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் மருத்துவர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் அழகப்பன் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

