sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அனுமதியின்றி செயல்பட்ட 6 டாஸ்மாக் பார்களுக்கு 'சீல்'

/

அனுமதியின்றி செயல்பட்ட 6 டாஸ்மாக் பார்களுக்கு 'சீல்'

அனுமதியின்றி செயல்பட்ட 6 டாஸ்மாக் பார்களுக்கு 'சீல்'

அனுமதியின்றி செயல்பட்ட 6 டாஸ்மாக் பார்களுக்கு 'சீல்'


ADDED : பிப் 07, 2025 06:41 AM

Google News

ADDED : பிப் 07, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; திருப்பூர் மாவட்ட எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ், மாவட்ட மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி., பாலமுருகன் ஆகியோர் உத்தரவின் பேரில், மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளர்கள் கோவிந்தசாமி, பழனிவேல்ராஜன் ஆகியோர் தலைமையில், மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ., அசோக்குமார் மற்றும் போலீசார் அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 'டாஸ்மாக்' கடைகள் மற்றும் பார்களில் ஆய்வு செய்தனர்.

அதில், அரசுக்கு மாதந்தோறும் கட்ட வேண்டிய ஏலத்தொகையை கட்டாமல் அரசு அனுமதியின்றி 'டாஸ்மாக்' கடையுடன் கூடிய பார்கள், செயல்பட்டது தெரியவந்தது. அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கடை எண்: 1511, கால்நடை மருத்துவமனை பஸ் ஸ்டாப் எதிரில், கடை எண்: 1923, கருவலுாரில் கடை எண்: 2206, சேவூரை அடுத்த போத்தம்பாளையத்தில் கடை எண்: 2201, காசிலிங்கம்பாளையம் கடை எண்: 1512 மற்றும் பொங்குபாளையம் கடை எண்: 1989 ஆகிய ஆறு டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் அனுமதியின்றி செயல்பட்டு வந்ததால், அதிகாரிகள் கடைகளை பூட்டி 'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us