ADDED : மார் 24, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம், வெள்ளகோவில், ஊத்துக்குளி உள்ளிட்ட சுற்ற வட்டாரங்களில் தெரு நாய்களால் கால்நடைகள் உயிரிழப்பு தொடர்கதையாக உள்ளது.
நேற்று ஊத்துக்குளி, சர்க்கார் கத்தாங்கண்ணியில் கதிரேசன் என்பவரின் தோட்டத்தில் 15க்கும் மேற்பட்ட ஆடுகளை தெருநாய்கள் கடித்தன. அதில் ஆறு ஆடுகள் இறந்தன. ஐந்து குட்டிகள் காயமடைந்தன. தொடர்ந்து, பச்சாபாளையம் கிராமத்தில், தினேஷ் என்பவர் தோட்டத்தில் நாய் கடித்ததில், இரு ஆட்டு குட்டிகள் இறந்தன.