sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோவிலில் அனுஷ பூஜை :திரளான பக்தர்கள் பங்கேற்பு

/

கோவிலில் அனுஷ பூஜை :திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோவிலில் அனுஷ பூஜை :திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோவிலில் அனுஷ பூஜை :திரளான பக்தர்கள் பங்கேற்பு


ADDED : பிப் 05, 2024 12:22 AM

Google News

ADDED : பிப் 05, 2024 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை செல்வ விநாயகர் கோவிலில், 'காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை' நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

உடுமலை ஜி.டி.வி., லே அவுட்டில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் சார்பில், ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை நடந்தது.

இப்பூஜை விக்னேஸ்வர பூஜையுடன் நேற்று வழிபாடு துவங்கியது. காலையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து மாலையில் அனுஷ நட்சத்திர பூஜை, வேத பாராயணம், குரு வந்தன பூஜை, சிவபுராணம், கோளறு திருப்பதிகம், திருத்தொண்டர் தொகை, விநாயகர் அகவல் பாராயணம் நடந்தது. ஓய்வுபெற்ற ஆசிரியர் மோகனசுந்தரம், 'குருமகிமை' தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார்.

உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் கூட்டு வழிபாடு நடந்தது. இந்நிகழ்ச்சியில், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வழிபாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்த அனுஷ பூஜைக்கான ஏற்பாடுகளை, ஜி.டி.வி., லே அவுட் செல்வ விநாயகர் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us