sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பின்னலாடை தொழில்முனைவோராகலாம் உருவாகிறது வழிகாட்டி மையம்

/

பின்னலாடை தொழில்முனைவோராகலாம் உருவாகிறது வழிகாட்டி மையம்

பின்னலாடை தொழில்முனைவோராகலாம் உருவாகிறது வழிகாட்டி மையம்

பின்னலாடை தொழில்முனைவோராகலாம் உருவாகிறது வழிகாட்டி மையம்


ADDED : ஆக 02, 2025 11:19 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பின்னலாடை தொழிலில் கால்பதித்துள்ள தொழில்முனைவோருக்கு வழிகாட்டவும், புதிய தொழில்முனைவோர் உருவாகுவதை ஊக்குவிக்கவும், 'மூன்றாவது கண்' என்ற வழிகாட்டி மையம் திருப்பூரில் துவங்கப்பட உள்ளது.

திருப்பூர் பின்னலாடை உற்பத்தி, பருத்தி நுாலிழையை ஆதாரமாக கொண்டு இயங்கி வருகிறது. சர்வதேச சந்தை வாய்ப்புகளை கூடுதலாக பெற, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை ஏற்றுமதியாளர்களும் நன்குணர்ந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகள் முன், பெயர் அளவுக்கு வந்த பாலியஸ்டர் பின்னல் துணிகளுக்கு வரவேற்பு இல்லை. பருத்தி நுாலிழை ஆடை உற்பத்தி என்பது உச்சநிலையை அடைந்துவிட்டது; அதே அளவுக்கு, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை உயர்த்த வேண்டியதும், திருப்பூரின் அடுத்த குறிக்கோளாக மாறிவிட்டது.

தைவான், சீனா உட்பட நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பாலியஸ்டர் பின்னல் துணி, வடமாநிலங்களில் உற்பத்தியாகும் சாயமிடப்பட்ட பாலியஸ்டர் பின்னல் துணி, திருப்பூரில் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. துணியை வாங்கினால், உடனே வெட்டி தைக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஒரே கூரையின் கீழ்...

திருப்பூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், புதிய தொழில்முனைவோராக வருவது அதிகரித்துள்ளது. இருப்பினும், ஆடை வடிவமைப்பு (டிசைனிங்), துணி 'கட்டிங்', ஆடை தைப்பது, பிரின்டிங், எம்ப்ராய்டரிங் என, பல்வேறு பிரிவுகளை கடந்துவர வேண்டியுள்ளது. தொழில்முனைவோருக்கு வழிகாட்டும் வகையில், திருப்பூரில் 'மூன்றாவது கண்' என்ற வழிகாட்டி மையம் அமைக்க, 'யெஸ் இந்தியா கேன்' அமைப்பு களமிறங்கியுள்ளது.

தொழில் அமைப்புகள் மற்றும் 'வால்ரஸ்', 'மேகலா மெஷின்ஸ்' போன்ற முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி மையம் அமைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. ஆடை தயாரிப்புக்கான 'பேட்டர்ன்' தயாரிப்பது, டிசைன் செய்வது துவங்கி, 'பேப்ரிக்' துணியை 'கட்டிங்' செய்வது, ஆடை வடிவமைப்பு, பிரின்டிங், எம்ப்ராய்டரிங், பேக்கிங் என, அனைத்து பணிகளையும், ஒரே கூரையின் கீழ் மேற்கொள்ளலாம். தற்போதைய நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கான, 'சாம்பிள்' தயாரிப்பதற்கும், இத்தகைய மையம் உறுதுணையாக இருக்கும்.

குறைந்த முதலீடு போதும் சீனாவில் பல்வேறு பகுதிகளில், பொருட்கள் உற்பத்தி நடந்தாலும், விற்பனை என்பது, ஒரே ஒரு பகுதியில் மட்டும் நடைபெறும். அப்போதுதான், நிலையான சந்தை வாய்ப்பை உருவாக்க முடியும். அதேபோல், பின்னலாடை உற்பத்தியில் உச்சத்தை அடைந்துள்ள திருப்பூரும், 'மார்க்கெட்டிங் ஜோன்' என்ற நிலைக்கு மாற வேண்டும். தொழில்முனைவோர் கூட்டாக இணைந்து, அதற்கான முயற்சியை துவக்க வேண்டும். குறிப்பாக, களத்தில் உள்ள புதிய தொழில்முனைவோருக்கும், எதிர்காலத்தில் வரும் தொழில்முனைவோருக்கும் பயனளிக்கும் வகையிலும், வழிகாட்டும் வகையிலும், 'மூன்றாவது கண்' என்ற மையம் திருப்பூர் ஸ்ரீநகரில் அமைய உள்ளது. பின்னலாடை தொழில் குறித்து எவ்விவரமும் தெரியாதவர் வந்தாலும், என்னவெல்லாம் செய்ய வேண்டும், எப்படியெல்லாம் ஆடை உற்பத்தி நடக்கிறது என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம். சர்வதேச விலையை காட்டிலும்,திருப்பூரில், 'பாலியஸ்டர் பேப்ரிக்' 15 சதவீதம் விலை குறைவாக கிடைக்கிறது. இதனால், குறைந்த முதலீட்டில் தொழில்முனைவோராக உயரலாம். கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், 'திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில், பாலியஸ்டர் ஒத்துவராது' என்று கூறினர்; தற்போது, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மாற வேண்டியது கட்டாயமாக மாறிவிட்டது. அடுத்தகட்டமாக, வணிக ரீதியான முன்னேற்றமும் உருவாக வேண்டும். அதற்காகவே, புதிய மாற்றத்தை உருவாக்கும் மூன்றாவது கண் என்ற வழிகாட்டி மையம் கைகொடுக்கும். - 'வால்ரஸ்' டேவிட், தலைவர், 'யெஸ் இந்தியா கேன்'.








      Dinamalar
      Follow us