sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வற்றாத கிணறு... வளமாக பயன்படுத்தலாமே!

/

வற்றாத கிணறு... வளமாக பயன்படுத்தலாமே!

வற்றாத கிணறு... வளமாக பயன்படுத்தலாமே!

வற்றாத கிணறு... வளமாக பயன்படுத்தலாமே!


ADDED : பிப் 16, 2024 01:39 AM

Google News

ADDED : பிப் 16, 2024 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்:திருப்பூர் அருகே 15 வேலம்பாளையம் ஊராட்சியாக இருந்தது. பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்ந்து தற்போது மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

வேலம்பாளையம் ஊராட்சியாக இருந்தபோது, அனுப்பர்பாளையம் ஜீவா வீதியில், 1964ம் ஆண்டு கிணறு அமைத்து, மேல்நிலை தொட்டி மூலம் அப்பகுதி முழுவதும் குடிநீர் சப்ளை செய்துள்ளனர்.

இந்த தொட்டியை அப்போதைய தொழில்துறை அமைச்சர் வெங்கட்ராமன், திறந்து வைத்துள்ளார். கிணறு அமைத்து 60 ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, அப்பகுதியை சுற்றி உள்ள 15 வீதிகளுக்கு இந்த தண்ணீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

ஆனால், கிணறு மற்றும் மேல்நிலை தொட்டியை மாநகராட்சி சார்பில், போதிய பராமரிப்பு செய்யப்படாததால், அப்பகுதி முழுவதும் மரங்கள் முளைத்து, முட்புதர் மண்டி உள்ளது.

கிணற்றுக்குள்ளும் மரங்கள் முளைத்து, மாசு பட்டு வருகிறது. இந்த கிணற்றில் எப்போதும் தண்ணீர் வற்றியது இல்லை. மாநகராட்சி ஊழியர்கள் உள்ளே செல்ல அச்சப்படுகின்றனர்.

முட்முதர்களை அகற்றி, கிணற்றை சுத்தமாக வைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us