/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெல் அறுவடைக்கு பிறகும் போராட்டம் கண்டுகொள்ளாத அரசு
/
நெல் அறுவடைக்கு பிறகும் போராட்டம் கண்டுகொள்ளாத அரசு
நெல் அறுவடைக்கு பிறகும் போராட்டம் கண்டுகொள்ளாத அரசு
நெல் அறுவடைக்கு பிறகும் போராட்டம் கண்டுகொள்ளாத அரசு
ADDED : பிப் 07, 2025 08:47 PM
உடுமலை, ; உடுமலை அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, அமராவதி ஆற்றில், தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதில், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார், காரத்தொழுவு பகுதிகளில், 4,686 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையிலிருந்து தண்ணீர் திறப்பை பொறுத்து, குறுகிய கால நெல் ரகங்களை, சாகுபடி செய்கின்றனர். இப்பகுதியில், போதிய உலர் கள வசதியில்லாததால், அறுவடை சீசனில், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
நெல் மணிகளை இயந்திரங்கள் வாயிலாக பிரித்தெடுத்த பிறகு, குறிப்பிட்ட நாட்கள், வெயிலில் உலர வைத்தால் மட்டுமே, ஈரப்பதம் குறைந்து விற்பனைக்கு தயாராகும்.
அப்பகுதி கிராமங்களில், போதிய உலர்களங்கள் இல்லாத நிலையில், ரோட்டிலும், விளைநிலங்களில் தார்ப்பாய் விரித்தும், நெல்லை காய வைக்கின்றனர். இதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
கடந்தாண்டு நெல்லை காய வைக்க போதிய வசதியில்லாமல், விவசாயிகள் தவித்தனர். இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு விவசாயிகள் அனுப்பிய மனு அடிப்படையில், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகள் கூறியதாவது: நெல் அறுவடை சீசனில், போதிய உலர்களங்கள் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிறு, குறு விவசாயிகள், ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, நெல் கொண்டு செல்ல வாகன செலவு அதிகரிப்பதால், தயக்கம் காட்டுகின்றனர்.
ஈரப்பதத்தை காரணம் காட்டி, விலை நிர்ணயிப்பதில், பாரபட்சம் காட்டுகின்றனர். எனவே, நெல் அதிகளவு சாகுபடியாகும் பகுதிகளில், உலர் களங்கள் கட்ட வேண்டும். பல முறை மனு அனுப்பியும் நெல் விவசாயிகளின் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு, தெரிவித்தனர்.