sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மூன்றாம் தவணை புரூசெல்லோசிஸ் தடுப்பூசி 2,600 கன்றுகளுக்கு இலக்கு

/

மூன்றாம் தவணை புரூசெல்லோசிஸ் தடுப்பூசி 2,600 கன்றுகளுக்கு இலக்கு

மூன்றாம் தவணை புரூசெல்லோசிஸ் தடுப்பூசி 2,600 கன்றுகளுக்கு இலக்கு

மூன்றாம் தவணை புரூசெல்லோசிஸ் தடுப்பூசி 2,600 கன்றுகளுக்கு இலக்கு


ADDED : பிப் 16, 2024 12:54 AM

Google News

ADDED : பிப் 16, 2024 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை கோட்டத்தில், 2,600 கன்றுகளுக்கு புரூசெல்லோசிஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், புரூசெல்லோசிஸ் மூன்றாவது தவணை தடுப்பூசி, கால்நடைகளுக்கு நேற்று முதல் செலுத்தப்படுகிறது.

புரூசெல்லோசிஸ் என்கிற நோய், பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு, மலட்டுத்தன்மை ஏற்படுத்துகிறது. புரூசெல்லா அபார்டஸ் என்கிற பாக்டீரியாவால் இந்த நோய் ஏற்படுகிறது.

நோய் பாதித்த கால்நடைகளுக்கு தீவிர காய்ச்சல், கருச்சிதைவு உருவாகிறது. நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் சினை பிடிப்பதில் சிக்கல் காரணமாக, பால் உற்பத்தி குறைந்து, கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

இந்த நோய் தாக்கிய கால்நடையின் நஞ்சுக்கொடியை கையாளும்பட்சத்தில், மனிதர்களுக்கும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும்.

புரூசெல்லோசிஸ் கருச்சிதைவு நோயை தடுக்க, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் வாயிலாக, கால்நடைகளுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், 4 மாதம் முதல் 8 மாதமான கிடாரி கன்றுகளுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தும் முகாம், நேற்று துவங்கிய நிலையில் மார்ச் 15 வரை நடத்தப்படுகிறது.

புரூசெல்லோசிஸ் தடுப்பூசி, கால்நடை நிலையங்கள் வாயிலாக நடைபெறும் முகாம்களில், இலவசமாக செலுத்தப்படும். காளைக்கன்றுகள், சினை மாடுகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தக்கூடாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கால்நடை உதவி இயக்குனர் ஜெயராம் கூறுகையில், 'உடுமலை கோட்டத்தில், ஓரிரு தினங்களில் துவங்கும் முகாம், ஒரு மாதம் வரை நடத்தப்படும். உடுமலை கோட்டத்தில், 2,600 கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us