/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடிக்கிருத்திகை கோலாகல கொண்டாட்டம்
/
ஆடிக்கிருத்திகை கோலாகல கொண்டாட்டம்
ADDED : ஆக 16, 2025 11:10 PM

திருப்பூர்; ஆடி கிருத்திகையான நேற்று, வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.
ஆடி மாதத்தில், இரண்டு முறை கிருத்திகை நட்சத்திரம் வந்தது; இரண்டாவது முறையாக கிருத்திகை நட்சத்திரம் வந்திருந்ததால், நேற்று, ஆடிக்கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஷண்முகசுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு, மகா அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்காரம், திருவீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தன.
வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில், சுவாமிக்கு மகா அபிேஷகமும், சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. செவ்வரளி மாலைகளை அணிந்து, வள்ளி, தெய்வானை சமேதராக, கல்யாண சுப்பிரமணியர் அருள்பாலித்தார்.
ஆடிக்கிருத்திகையான நேற்று, மூர்த்தி நாயனார் மற்றும் புகழ்சோழ நாயனார் குருபூஜை நடந்தது. சிவாச்சார்யார்கள் அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் செய்தனர். அர்த்தஜாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் மன்றத்தினர், திருவாசகம் மற்றும் தேவார பதிகங்களை பாராயணம் செய்து வழிபட்டனர்; தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.