sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அடுத்தடுத்து விபத்து; 'வழுவழு' ரோடால் ஆபத்து

/

அடுத்தடுத்து விபத்து; 'வழுவழு' ரோடால் ஆபத்து

அடுத்தடுத்து விபத்து; 'வழுவழு' ரோடால் ஆபத்து

அடுத்தடுத்து விபத்து; 'வழுவழு' ரோடால் ஆபத்து


ADDED : ஜூலை 17, 2025 10:51 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையத்தில் சென்டர் மீடியனில் மோதி, அடுத்தடுத்து வந்த அரசு பஸ்கள் விபத்துக்குள்ளானது.

திருப்பூர், தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையத்தில் வளைவில் அடிக்கடி விபத்து நடப்பது தொடர்கதையாக உள்ளது. அந்த குறிப்பிட்ட இடத்தில் ரோடு 'வழுவழு' என இருப்பதால் விபத்து நடந்து வருகிறது. இரவு நேரங்களில் தெருவிளக்கும் எரியாமல் இருள் சூழ்ந்து இருக்கிறது. சம்பந்தப்பட்ட இடத்தில் விபத்து ஏற்படாமல், ரோட்டை சீரமைப்பது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் தரப்பில் வலியுறுத்தி வருகின்றனர்.

செங்கோட்டையில் இருந்து நேற்று முன்தினம் இரவு பயணிகளுடன் கிளம்பி திருப்பூர் வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்ற அரசு பஸ்சும், திருச்செந்துாரில் இருந்து கோபிக்கு திருப்பூர் வழியாக சென்ற அரசு பஸ்சும் நேற்று அதிகாலை, 5:30 மணியளவில் கே.செட்டிபாளையம் வளைவில் டிரைவர்களின் கட்டுப்பாட்டை மீறி, சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. பஸ்சின் முன் பகுதி சேதமடைந்தது. பஸ்சில் பயணித்த பழனிசாமி என்பவர் காயமடைந்தார். எனவே, விபத்து அபாயம் உள்ள ரோட்டை சரி செய்து, தடுப்பு நடவடிக்கையை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us