/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தினமும் விபத்து... நீங்குமா ஆபத்து?
/
தினமும் விபத்து... நீங்குமா ஆபத்து?
ADDED : டிச 23, 2024 04:31 AM

சாலை சேதம்
திருப்பூர், இரண்டாவது மண்டலம் அலுவலகம் முன், லட்சுமி நகரில் சாலை சேதமாகியுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விடும் முன், சீர் செய்ய வேண்டும்.- முத்துக்குமார், லட்சுமி நகர். (படம் உண்டு)
பெருமாநல்லுார், பிச்சம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் சாலை சேதமாகியுள்ளது. தினசரி ஒரு விபத்து நடக்கிறது. நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்வதில்லை.
- மனோகர், திருமுருகன்பூண்டி. (படம் உண்டு)
சகதியுடன் சாலை
பல்லடம், சேகாம்பாளையம், நாரணாபுரம் கிராமத்தில் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மழைநீர் வெளியேற வழியில்லாத நிலை உள்ளது.
- தியாஷ், சேகாம்பாளையம். (படம் உண்டு)
எரியாத விளக்கு
மங்கலம் ரோடு, பாரப்பாளையம் - ராயபுரம் தீபம் பாலம் சந்திப்பு சாலையில் உயர்கோபுர மின்விளக்கு எரியாமல், இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
- ராஜேந்திரன், பத்மினி கார்டன். (படம் உண்டு)
மூடி சேதம்
கருவம்பாளையம், கே.வி.ஆர்., நகர், ஒலிம்பிக் பேக்கரி வீதியில், பாதாள சாக்கடை மூடி சேதமாகியுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
- சுரேஷ், கே.வி.ஆர்., நகர். (படம் உண்டு)
ரியாக் ஷன்
குழாய் சீரானது
அங்கேரிபாளையம், நீதி அம்மாள் நகர் இரண்டாவது வீதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடியதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. குழாயை மாற்றி அடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது.
- மனோகர், நீதி அம்மாள் நகர். (படம் உண்டு)
தற்காலிக தடுப்பு
எஸ்.பெரியபாளையம், ஏ.சி.எஸ்., மாடர்ன் சிட்டி சந்திப்பில் குப்பை தேங்கியிருப்பதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. குப்பைகளை அள்ளிவிட்டு அவ்விடத்தில் குப்பை கொட்டாமல் இருக்க, தற்காலிக தடுப்பு அமைத்துள்ளனர்.
- ரங்கசாமி, ஏ.சி.எஸ்., மாடர்ன் சிட்டி. (படம் உண்டு)
புதிய சாலை
திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் எம்.ஜி., புதுார் மூன்றாவது வீதி சாலை குண்டும் குழியுமாக இருப்பது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி மூலம் புதிய தார் ரோடு போடப்பட்டு விட்டது.
- அருணா, எம்.ஜி., புதுார். (படம் உண்டு)

