sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

செஞ்சேரி ரோட்டில் அபாய வளைவு மேம்படுத்தாததால் விபத்து அதிகரிப்பு  

/

செஞ்சேரி ரோட்டில் அபாய வளைவு மேம்படுத்தாததால் விபத்து அதிகரிப்பு  

செஞ்சேரி ரோட்டில் அபாய வளைவு மேம்படுத்தாததால் விபத்து அதிகரிப்பு  

செஞ்சேரி ரோட்டில் அபாய வளைவு மேம்படுத்தாததால் விபத்து அதிகரிப்பு  


ADDED : ஜன 14, 2025 01:37 AM

Google News

ADDED : ஜன 14, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, . ; செஞ்சேரிமலை ரோட்டிலுள்ள அபாய வளைவுகளை மேம்படுத்தாமல் இருப்பதால், விபத்துகள் தொடர்கதையாக உள்ளது.

உடுமலை-செஞ்சேரிமலை ரோட்டில், 24 கி.மீ., தொலைவு, மாவட்ட முக்கிய சாலைகள், பிரிவின் கீழ், நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது.

பெதப்பம்பட்டி, செஞ்சேரிமலை வழியாக, கோவை உட்பட பகுதிகளுக்கு, அதிகளவு வாகனங்கள், இந்த ரோட்டில், செல்கின்றன. நுாற்பாலை உட்பட பல தொழிற்சாலைகள இவ்வழித்தடத்தில், அமைந்துள்ளதால், கனரக வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.

ஆனால், ரோட்டிலுள்ள அபாய வளைவுகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளன. மாலகோவில் பிரிவு, லிங்கமநாயக்கனுார் பிரிவு, சிந்திலுப்பு, கொசவம்பாளையம் ரோடு சந்திப்பு உட்பட பல இடங்களில், இந்த ரோட்டில், அபாய வளைவுகள் உள்ளன.

எதிரே வரும் வாகனங்கள், விலகி செல்ல முடியாத அளவுக்கு குறுகலாகவும், 'எஸ்' வளைவு போல அமைந்துள்ளதால், கனரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

மேலும், வளைவு பகுதிகளில், ரோடு சிதிலமடைந்து, பெரிய குழிகள் ஏற்பட்டுள்ளதால், இரவு நேரங்களில், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் நிலை தடுமாறி, விபத்துக்குள்ளாகின்றனர்.

பல ஆண்டுகளாக கிடப்பில், போடப்பட்டுள்ள ரோடு விரிவாக்கம் மற்றும் வளைவுகள் மேம்பாட்டை உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us