sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் ஏ.சி. பெட்டி சேர்ப்பு

/

 கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் ஏ.சி. பெட்டி சேர்ப்பு

 கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் ஏ.சி. பெட்டி சேர்ப்பு

 கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் ஏ.சி. பெட்டி சேர்ப்பு


ADDED : நவ 13, 2025 10:12 PM

Google News

ADDED : நவ 13, 2025 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்துார், குப்பம், கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் (எண்:22666) இயக்கப்படுகிறது.

காலை 5:45 மணிக்கு புறப்படும் ரயில் மதியம், 12:45 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. மதியம், 2:15 மணிக்கு புறப்பட்டு, இரவு, 09:05 மணிக்கு கோவை வந்தடைகிறது. கோவை - திருப்பூர் - ஈரோடு வழித்தடத்தில் இயங்கும் ஒரு இரண்டடுக்கு (டபுள்டெக்கர்) ரயில் இதுவாகும்.

'ரயிலில் முன்பதிவு பெட்டி மட்டுமே உள்ள நிலையில், இந்த ரயிலில் ஏ.சி.யுடன் கூடிய இருக்கை முன்பதிவு பெட்டி வேண்டும்,' என பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனால், தற்போதுள்ள இரண்டடுக்கு பெட்டிகளில் ஒன்று குறைக்கப்பட்டு, புதிதாக ஒரு ஏ.சி. இருக்கை வசதி பெட்டி, 2026 ஜன. மாதம் முதல் சேர்க்கப்பட உள்ளது; இதற்கான டிக்கெட் முன்பதிவு குறித்து அறிவிக்கப்பட உள்ளது.

சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ஜன. 20 முதல் மே, 19 வரை சோதனை முறையில், ஏ.சி. இருக்கை வசதி பெட்டி சேர்க்கப் படுகிறது.

டிக்கெட் முன்பதிவுக்கு ஏற்ப அடுத்த ஆறு மாதங்கள் கழித்து, பெட்டி தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us