sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பழநிக்கு கூடுதல் பஸ்; பக்தர்கள் வலியுறுத்தல்

/

பழநிக்கு கூடுதல் பஸ்; பக்தர்கள் வலியுறுத்தல்

பழநிக்கு கூடுதல் பஸ்; பக்தர்கள் வலியுறுத்தல்

பழநிக்கு கூடுதல் பஸ்; பக்தர்கள் வலியுறுத்தல்


ADDED : ஜன 29, 2025 08:44 PM

Google News

ADDED : ஜன 29, 2025 08:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; தைப்பூச விழாவை முன்னிட்டு, உடுமலை வழியாக பழநிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கி, நெரிசலை தவிர்க்க வேண்டும், என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பழநி தண்டாயுதபாணி சுவாமிகள் கோவிலில், நடைபெறும் தைப்பூச விழா பிரசித்தி பெற்றதாகும். விழாவுக்கு, பாதயாத்திரையாகவும், பஸ்களிலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உடுமலை சுற்றுப்பகுதிகளில் இருந்து செல்கின்றனர்.

பாதயாத்திரை பக்தர்கள் தரிசனம் முடிந்து திரும்ப வரும் போது, போதிய பஸ்கள் இல்லாமல், தவிக்கின்றனர். இதே போல், விழாவுக்கு செல்பவர்களும், பஸ்களில் நெருக்கடியாக பயணித்து செல்ல வேண்டியுள்ளது.

பழநியில் இருந்து பொள்ளாச்சி, கோவைக்கு இயக்கப்படும் பஸ்களில், உடுமலை பயணியரை ஏற்ற மறுக்கின்றனர். இதனால், குழந்தைகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, பொள்ளாச்சி, உடுமலை வழியாக பழநிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.

மேலும், பிற கிராம வழித்தடங்களிலும், சிறப்பு பஸ்கள் இயக்கினால், பக்தர்களும் பயன்பெறுவர். போக்குவரத்து கழகத்துக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். விழாவுக்கு பின், சில நாட்கள் கூடுதல் பஸ் சேவையை நீட்டித்தால் பயனுள்ளதாக இருக்கும், என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us