/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அகல் விளக்கும் பட்டாசும் அகலாது
/
அகல் விளக்கும் பட்டாசும் அகலாது
ADDED : அக் 25, 2024 10:31 PM
l இந்தியாவில் மட்டுமின்றி, அண்டை நாடுகளான, வங்கதேசம், இலங்கை, மலேஷியாவிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஆனால், பெயர்களும், கொண்டாடும் முறைகளிலும் மாற்றம் இருக்கும்.
l தமிழகத்தில், தீபாவளியன்று, சிறுவர்கள் பட்டாசு வெடிக்க விரும்புவர். ஆனால், குஜராத் மாநிலத்தில், தீபாவளி அன்று யாரும் பட்டாசை பற்றி நினைப்பதில்லை. அதற்கு பதிலாக, சிறுவர் முதல் பெரியவர் வரை, விதவிதமான பட்டங்கள் செய்து, வானில் பறக்க விட்டு மகிழ்வர்.
l காசியில், பிரசித்தி பெற்ற அன்னபூரணி கோவில் இருக்கிறது. இந்த கோவிலில், தீபாவளி சமயத்தில், மூன்று நாட்களுக்கு மட்டும், தங்க அன்னபூரணியாக காட்சி அளிப்பார்.
l தாய்லாந்தில், தீபாவளியன்று, வாழை மட்டைகளில் விளக்கு ஏற்றி வைத்து, அதை நீரில் விட்டு வழிபடுவர்.
l தீபாவளி என்றால், பட்டாசுகளும், பிரகாசமிடும் அகல் விளக்குகளும் இணைந்தே நினைவிற்கு வரும். இதற்கு ஒரு காரணம் உண்டு. விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம், வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம்.