sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்

/

அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்

அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்

அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 21, 2025 05:48 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., மகளிர் அணி சார்பில், ஹிந்து மதம் மற்றும் பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து, குமரன் சிலை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள் தலைமை வகித்தார். இணைச்செயலாளர் சங்கீதா, துணைச் செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி நிர்வாகிகள் கருப்பு நிற சேலை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 'பொன்முடியை கைது செய்' என்கிற வாசகம் பொறித்த பதாகைகளை ஏந்தியிருந்தனர். பெண்களை இழிவாக பேசிய பொன்முடியை கண்டித்தும், உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், 'பெண்களை இழிவாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவேண்டும். அதற்காகவே, இந்த போராட்டத்தை அ.தி.மு.க., கையிலெடுத்துள்ளது. பதவியிலிருந்து நீக்கும்வரை போராட்டம் தொடரும்' என, பேசினார்.

எம்.எல்.ஏ., விஜயகுமார், ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us