sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மன மகிழ் மன்றங்களில் மது விற்பனை கூடாது!

/

மன மகிழ் மன்றங்களில் மது விற்பனை கூடாது!

மன மகிழ் மன்றங்களில் மது விற்பனை கூடாது!

மன மகிழ் மன்றங்களில் மது விற்பனை கூடாது!


ADDED : மார் 18, 2025 04:41 AM

Google News

ADDED : மார் 18, 2025 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், கரைப்புதுாரை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சியினர் பங்கேற்று, கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் - பல்லடம் ரோடு, அருள்புரத்தில், எப்.எல்:2 அனுமதி பெற்ற இரண்டு மன மகிழ் மன்றங்கள் செயல்படுகின்றன. உறுப்பினராக உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, விதிமீறி, இரவு, பகலாக அனைவருக்கும் மது விற்பனை செய்யப்படுகிறது. கரைப்புதுார் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில், மதுக்கடை செயல்படுத்த கூடாது என தீர்மானம் நிறைவேற்றியும், இவ்விரு மன மகிழ் மன்றங்களிலும் மது விற்பனை தொடர்ந்து நடக்கிறது.

இந்நிலையில், டி.ஆர்.ஜி., திருமண மண்டபம் அருகிலும், தனியார் பள்ளி அருகிலும் புதிதாக மதுக்கடை திறக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது. ஏற்கனவே இரண்டு மன மகிழ் மன்றங்கள் செயல்படும்நிலையில், புதிய மதுக்கடை அமைக்க அனுமதி அளிக்க கூடாது.

இவ்வாறு, அதில் அவர்கள் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us