ADDED : அக் 18, 2024 10:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலையைச்சேர்ந்தவர் கவியழகன், 37. பொங்கலுாரைச்சேர்ந்தவர் சமுத்திரபாண்டியன், 52. வெள்ளகோவிலைச்சேர்ந்தவர் வீரம்மாள் 63. மூவரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தனர். இ.எஸ்.ஐ., பயனாளிகளான முவரும், பணியின்போது உயிரிழந்தனர்.
கவியழகன் குடும்பத்தினருக்கு, 1,31,840 ரூபாய் உதவித்தொகை மற்றும் மாதந்தோறும், 7,680 ரூபாய் வழங்கும் மாதாந்திர உதவித்தொகை;
சமுத்திரபாண்டியன் குடும்பத்தினருக்கு, 1,39,020 ரூபாய் உதவித்தொகை மற்றும் 12,600 ரூபாய் மாதாந்திர உதவித் தொகை; வீரம்மாள் குடும்பத்தினருக்கு, 15,680 ரூபாய் உதவித்தொகை மற்றும் 5,880 ரூபாய் மாதாந்திர உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டன.
உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை, துணை இயக்குனர்கள் ரவிக்குமார், கார்த்திகேயன் ஆகியோர் வழங்கினர்.
- நமது நிருபர் -

