sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நொய்யல் கரை ரோட்டில் சமூக விரோதிகள் அட்டகாசம்

/

நொய்யல் கரை ரோட்டில் சமூக விரோதிகள் அட்டகாசம்

நொய்யல் கரை ரோட்டில் சமூக விரோதிகள் அட்டகாசம்

நொய்யல் கரை ரோட்டில் சமூக விரோதிகள் அட்டகாசம்


ADDED : நவ 09, 2025 12:15 AM

Google News

ADDED : நவ 09, 2025 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: நொய்யல் ரோட்டில் அமைத்துள்ள தெருவிளக்குகள், பல மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராமல், காட்சிப்பொருளாக மாறியுள்ளன.

திருப்பூர் மாநகராட்சியின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், நொய்யல் கரையோரம் புதிய வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய மண்பாதை அமைத்து ஆற்றின் இருபுறமும் தார்ரோடு அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அதிகம்பயன்படுத்தும் அந்தரோட்டில், உயரமான கம்பங்கள் அமைத்து, தெருவிளக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

அதற்கான மின்சார ஒயரிங் பணிகளும் முடிந்துவிட்டன. பல மாதங்களாகியும், எந்தவொரு பகுதியிலும் தெருவிளக்கு எரிவதில்லை. மாறாக, காட்சிப்பொருளாக மாறியுள்ள தெகருவிளக்குளில் இருந்து, 'கன்ட்ரோல் பாக்ஸ்' காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

பொதுமக்கள் கூறுகையில், 'நகரப்பகுதியில் நெரிசலில் சிக்காமல், எளிதாக சென்றுவர, நொய்யல் கரையோர ரோடுகள் பயனுள்ளதாக இருக்கின்றன.

இருப்பினும், பாம்பு நடமாட்டம் அதிகம் என்பதால், பகல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தி வருகிறோம்.

தெருவிளக்கு பொருத்தி, பல மாதங்களாகியும், இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆங்காங்கே நடக்கும் விபரீதங்களை பார்க்கும் போது, இவ்வழியாக சென்றுவர, தெருவிளக்கு மிக மிக அவசியம். போலீசாரும், இவ்வழியாக ரோந்து சென்றுவர வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us