/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அனுஷ பூஜை சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
அனுஷ பூஜை சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் பங்கேற்பு
அனுஷ பூஜை சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் பங்கேற்பு
அனுஷ பூஜை சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஜன 08, 2024 11:22 PM
உடுமலை:உடுமலை, ஜி.டி.வி., லே அவுட் செல்வ விநாயகர் கோவிலில் அனுஷ பூஜை நடந்தது.
கோவிலில் அனுஷ பூஜையுடன், காஞ்சி மகா பெரியவா சித்தி அடைந்த தினத்தையொட்டி, சிறப்பு பூஜைகளும் நடந்தது. விக்னேஸ்வர பூஜையுடன் வழிபாடு துவங்கியது.
காலையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் அனுஷ நட்சத்திர பூஜை, வேத பாராயணம், குரு வந்தன பூஜை, சிவபுராணம், கோளாறு பதிப்பதிகம், திருத்தொண்டர் தொகை, விநாயகர் அகவல் பாராயணம் நடந்தது.
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வருவதற்கும், உலக நன்மைக்காகவும் கூட்டு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் வழிபாட்டில் பங்கேற்றனர். பூஜைக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.