sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஹைடெக் நகரில் காத்திருக்கும் அடுக்குமாடி வீடு! இடைத்தரகரிடம் பணத்தை இழக்கும் மக்கள்

/

ஹைடெக் நகரில் காத்திருக்கும் அடுக்குமாடி வீடு! இடைத்தரகரிடம் பணத்தை இழக்கும் மக்கள்

ஹைடெக் நகரில் காத்திருக்கும் அடுக்குமாடி வீடு! இடைத்தரகரிடம் பணத்தை இழக்கும் மக்கள்

ஹைடெக் நகரில் காத்திருக்கும் அடுக்குமாடி வீடு! இடைத்தரகரிடம் பணத்தை இழக்கும் மக்கள்


ADDED : மே 22, 2025 03:47 AM

Google News

ADDED : மே 22, 2025 03:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பல்லடத்தில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கான பயனாளிகள் தேர்வு நடந்து வருகிறது. 'இடைத்தரகர் களிடம் பணத்தை இழக்காமல், பயனாளிகள் நேரில் விண்ணப்பிக்கலாம்' என, வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீரபாண்டி, நெருப்பெரிச்சல், பாரதிநகர், திருக்குமரன்நகர், பூண்டி, அவிநாசி உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

தற்போது, பல்லடம், கக்கம்பாளையம் கிராமம், ஹைடெக் பார்க் நகரில், 45.75 கோடி ரூபாய் மதிப்பில், 173 ஏக்கர் பரப்பளவில், 8 தளங்களில், 432 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது; இங்கு, 'லிப்ட்' வசதியும் உண்டு. இங்கு குடியிருப்பு பெற, பங்களிப்பு தொகையாக, 3.09 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.பெருந்தொழுவில், 20.55 கோடி ரூபாய் செலவில், 4 தளங்களில், 192 வீடு களுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இங்கு குடியிருப்பு பெற பங்களிப்பு தொகையாக, 2.20 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.

டயல் செய்யுங்க... விபரம் தெரியும்!


வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க, அந்தந்த பகுதியில் வசிக்கும் தகுதியுள்ளவர்கள், குடியிருப்பு அமைந்துள்ள இடத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்திலேயே நேரடியாக விண்ணப்பிக்கலாம். பல்லடம் ைஹடெக் பார்க் நகரில், சாலையோரம் குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது; அங்கு, 300 வீடுகள் காலியாக உள்ளன. வாரியம் மற்றும் மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெற்று, முழு பங்களிப்பு தொகை செலுத்தும் பயனாளிகளுக்கே குடியிருப்புகள் ஒதுக்கப் படுகின்றன.

எனவே, வீடு வாங்கி தருவதாக கூறி பணம் கேட்கும், இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து மக்கள் ஏமாற வேண்டாம். இந்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தியும், பொதுமக்கள் பலர், வெளிநபர்களிடம் பெரும் தொகையை கூடுதலாக கொடுத்து ஏமாந்து விடுகின்றனர்.

அரசு நிர்ணயித்த தொகையை மட்டும் செலுத்தி, எவ்வித சிபாரிசுமின்றி தகுதியான பயனாளிகளுக்கு அதிகாரிகளே குடியிருப்பை ஒதுக்கும் போது, வெளிநபர் களிடம் பணத்தை இழக்க வேண்டாம். மேலும் விவரம் தேவைப்படுவோர், 96267 - 27628 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றனர்.






      Dinamalar
      Follow us