ADDED : அக் 14, 2025 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரோட்டரி கிளப் ஆப் தாராபுரம் சார்பில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. தலைவர் பாலாஜி வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காளிமுத்து தலைமை வகித்தார். முன்னால் ரோட்டரி கவர்னர் ஜார்ஜ் சுந்தரராஜ் முன்னிலை வகித்தார். இதில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற, நான்கு ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
தாராபுரம், குண்டடம், மூலனுார் ஒன்றியங்களை சேர்ந்த, 12 ஆசிரியர்களுக்கு ரோட்டரியின் தேசிய கட்டமைப்பாளர் விருது வழங்கப்பட்டது. சிறார் தபால் சேமிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தும், 40 சிறார்கள் கவுரவிக்கப்பட்டனர்.