sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஒருமைப்பாட்டு முகாம் மாணவருக்கு பாராட்டு

/

ஒருமைப்பாட்டு முகாம் மாணவருக்கு பாராட்டு

ஒருமைப்பாட்டு முகாம் மாணவருக்கு பாராட்டு

ஒருமைப்பாட்டு முகாம் மாணவருக்கு பாராட்டு


ADDED : பிப் 06, 2024 12:42 AM

Google News

ADDED : பிப் 06, 2024 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில், கர்நாடகா மாநிலம், குல்பர்கா பல்கலையில் இன்று முதல் வரும், 12 ம் தேதி வரை தேசிய ஒருமைப்பாடு முகாம் நடக்கிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.

கோவை பாரதியார் பல்கலையில் இருந்து, 10 பேர் தேர்வாகியுள்ளனர். இதில், சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2 மாணவர் நவீன்குமார் (விலங்கியல் துறை), கயல்விழி (கணினி பயன்பாடு) இருவரும் தேர்வாகியுள்ளனர்.

அத்துடன் தமிழக என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் அணியை வழிநடத்திச் செல்ல, சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2, ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தேர்வாகியுள்ளார். பேராசிரியர் மற்றும் மாணவ, மாணவியர் கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள், நேற்று வாழ்த்தி, வழியனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us