ADDED : டிச 20, 2024 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் செயற்குழு கூட்டம், 'சைமா' அலுவலகத்தில் நடந்தது. தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்று, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். ஆர்பிட்ரேஷன் விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும், வழக்குகளை விரைந்து முடித்து தீர்வு காண்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இணை செயலாளராக இருந்த சண்முகசுந்தரம் பதவி விலகியதை அடுத்து, சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், செந்தில்குமார் இணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்று கொண்டார்.

