sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அத்திக்கடவு - அவிநாசி திட்ட குளம், குட்டைகள் நிரம்பின

/

அத்திக்கடவு - அவிநாசி திட்ட குளம், குட்டைகள் நிரம்பின

அத்திக்கடவு - அவிநாசி திட்ட குளம், குட்டைகள் நிரம்பின

அத்திக்கடவு - அவிநாசி திட்ட குளம், குட்டைகள் நிரம்பின

3


ADDED : அக் 10, 2024 06:24 AM

Google News

ADDED : அக் 10, 2024 06:24 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின், 60 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு -அவிநாசி திட்டப்பணி நிறைவுற்று, 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் பணி நடந்து வருகிறது.

பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து, காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரிநீர் தான், இத்திட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது. தென்மேற்கு பருவமழை ஓய்ந்து, தற்போது வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், பவானி ஆற்றில் வெள்ளம் அதிகரித்திருக்கிறது.

அத்திக்கடவு - அவிநாசி திட்ட குளம், குட்டைகளுக்கான நீர்வழித்தடத்தில் மழைநீரும் வழிந்தோடி வருவதால், அவை வேகமாக நிரம்பி ததும்புகின்றன.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செய்தி தொடர்பாளர் சண்முக சுந்தரம் கூறுகையில், ''கருவலுார் உள்ளிட்ட இடங்களில், பல ஆண்டுகளாக நிரம்பாத குளம், குட்டைகள் கூட, தற்போது நிரம்பி வருகின்றன. இது விவசாயிகள் மற்றும் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுற்றியுள்ள விவசாய நிலங்கள் நீர் வளம் பெறும்; நிலத்தடி நீர்மட்டமும் உயரும். மேலும் சில இடங்களில் நீர் வராமல் உள்ள குளம், குட்டைகளுக்கும் நீர் வினியோகிக்க வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us