sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 தாராபுரம் ரோட்டின் மீது அதிகாரிகள் திடீர் 'கரிசனம்' 

/

 தாராபுரம் ரோட்டின் மீது அதிகாரிகள் திடீர் 'கரிசனம்' 

 தாராபுரம் ரோட்டின் மீது அதிகாரிகள் திடீர் 'கரிசனம்' 

 தாராபுரம் ரோட்டின் மீது அதிகாரிகள் திடீர் 'கரிசனம்' 


ADDED : நவ 28, 2025 05:41 AM

Google News

ADDED : நவ 28, 2025 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் - தாராபுரம் ரோடு, என்.எச்., ரோடாக உள்ளது. தென் மாவட்டங்களை தாராபுரம் வழியாக திருப்பூருடன் இணைக்கும் முக்கியமான ரோடாக இந்த ரோடு உள்ளது. மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து அரசு மருத்துவமனை, கோவில் வழி பஸ் ஸ்டாண்ட் வழியாக இந்த ரோடு செல்கிறது.

இப்பகுதியில் என்.எச். ரோடு வளைவாகவும், தாழ்வாகவும் செல்கிறது. மேலும், ரோடு மிகவும் வழுவழுப்பாக இருப்பதால், வாகனங்களின் டயர்கள் வழுக்கிச் செல்கின்றன. இதனால், வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குவது வழக்கமாக உள்ளது.

அவ்வாறு நடந்த பல விபத்தில், வாகனங்கள், தெரு விளக்குகள், சென்டர் மீடியன் சேதமடைவது, போக்குவரத்து அவதி என இது தொடர்ந்து ஏற்படுகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில், இப்பகுதியில் ரோட்டை சரி செய்ய வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

இந்நிலையில், அப்பகுதியில் அதிக வழுக்கலாகவும், தாழ்வாகவும் ரோடு அமைந்துள்ள பகுதியில் 'மில்லிங்' முறையில் ரோட்டை சீரமைக்கும் நடவடிக்கையை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர்.

இதனால், இது போன்ற வாகனங்கள் சறுக்கியும், வழுக்கியும் விபத்தில் சிக்குவது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us