/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு விருது; உடுமலை, பெதப்பம்பட்டிக்கு வழங்கல்
/
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு விருது; உடுமலை, பெதப்பம்பட்டிக்கு வழங்கல்
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு விருது; உடுமலை, பெதப்பம்பட்டிக்கு வழங்கல்
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு விருது; உடுமலை, பெதப்பம்பட்டிக்கு வழங்கல்
ADDED : அக் 15, 2024 10:11 PM
உடுமலை : அதிக விளைபொருட்களை இருப்பு வைத்து, பொருளீட்டுக்கடன் வழங்கிய, உடுமலை, பெதப்பம்பட்டி உட்பட ஐந்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு, நற்சான்று மற்றும் விருது வழங்கப்பட்டுள்ளது.
தேசிய மின்னணு களஞ்சியம் நிறுவனம், அதிக அளவு விளைபொருட்களை இருப்புவைத்து, பொருளீட்டு கடன் வழங்கிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு நற்சான்று மற்றும் கேடயம் வழங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், பெதப்பம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 5 ஆயிரத்து, 753 டன் தேங்காய் பருப்பு மற்றும் மக்கச்சோளம் இருப்பு வைக்கப்பட்டு, 28 பேருக்கு, 1.98 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
உடுமலையில் 1,281 டன் தேங்காய் பருப்பு இருப்பு வைக்கப்பட்டு, 8.22 கோடி ரூபாய் பொருளீட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது.
அதே போல், பொங்கலுாரில் 105.35 டன் தேங்காய் பருப்பு இருப்பு வைக்கப்பட்டு, 82.09 லட்சம் ரூபாய்; மூலனுாரில் 250 டன் தேங்காய் பருப்பு இருப்பு வைத்து, 2 கோடி ரூபாய் பொருளீட்டு கடனும், காங்கயத்தில் 152.65 டன் தேங்காய் பருப்பு இருப்பு வைக்கப்பட்டு 1.29 கோடி ரூபாய் பொருளீட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக, உடுமலை, பெதப்பம்பட்டி, மூலனுார், காங்கயம், பொங்கலுார் என மாவட்டத்திலுள்ள ஐந்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கும், நற்சான்று மற்றும் விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது மற்றும் சான்று பெற்ற ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் ராமன், செந்தில்குமார், அழகிரி சாந்தலிங்கம், மாரியப்பன், சிவக்குமார் ஆகியோருக்கு, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பாராட்டினார்.
மாவட்ட வேளாண் விற்பனை குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ், வேளாண் அலுவலர் ரம்யாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.