ADDED : டிச 23, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
கலெக்டர் கிறிஸ்துராஜ், கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கிவைத்தார். எல்.ஆர்.ஜி., கல்லுாரி மாணவியர் மற்றும் நுகர்வோர் நல அமைப்பினர், நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கிய ஊர்வலம், தென்னம்பாளையம் வரை சென்று திரும்பியது.