நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூரில், வாசக்டமி விழிப்புணர்வு வாகன பயணம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை நவீன வாசக்டமி விழிப்புணர்வு வாகன பயணத்தை, கலெக்டர் மனிஷ் நாரணவரே, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் மனோன்மணி, மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இணை இயக்குனர் மீரா உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த வாகனம், வரும் டிச. 4ம் தேதி வரை, மக்கள் கூடும் பகுதிகளுக்கு சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தும்.

