ADDED : டிச 08, 2025 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: சேவூர் ஸ்ரீ பால சாஸ்தா அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. காலையில் கணபதி ஹோமம், சாஸ்தா ஹோமம், பூர்ணாகுதி உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு தீர்த்தங்களால் அபிேஷகம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பால சாஸ்தா அய்யப்பன் எழுந்தருளினார். ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

