sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'வாழை இலையில் மட்டுமே பஜ்ஜி பார்சல்'

/

'வாழை இலையில் மட்டுமே பஜ்ஜி பார்சல்'

'வாழை இலையில் மட்டுமே பஜ்ஜி பார்சல்'

'வாழை இலையில் மட்டுமே பஜ்ஜி பார்சல்'


ADDED : பிப் 14, 2024 11:35 PM

Google News

ADDED : பிப் 14, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவு பண்டங்களை, வாழை இலையில் மட்டுமே பார்சல் செய்யவேண்டும் என, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஓட்டல், பேக்கரி உரிமையாளர்கள், சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், நடந்தது. மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை பேசியதாவது:

ஓட்டல், உணவகங்களில், பஜ்ஜி, போண்டா உள்பட தின்பண்டங்களை, ஈக்கள் மொய்க்காதவாறு மூடிவைத்து விற்பனை செய்ய வேண்டும். எண்ணெய் பண்டங்களை செய்தித்தாள்களில் வைத்து, உண்பதற்காகவோ அல்லது பார்சல் செய்து கொடுப்பதை தவிர்க்கவேண்டும். வாழை இலையில் மட்டுமே பார்சல் செய்யவேண்டும்.

ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. சுத்தமான இடத்தில், சுகாதாரமான முறையில் உணவு பண்டங்கள் தயார் செய்யவேண்டும். திருப்பூர் மாவட்டத்தில், கடந்த மூன்று மாதங்கள் நடத்தப்பட்ட ஆய்வில், பஜ்ஜி, போண்டா பார்சல் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 192 கிலோ செய்தித்தாள் பறிமுதல் செய்யப்பட்டு, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

உணவுப்பொருளின் தரம் சார்ந்த புகார்களை, 94440 42322 என்கிற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது tnfood safety consumer app என்கிற செயலியில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்தாத சிறந்த பத்து உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு, விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us