sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பாலா ஆர்த்தோ மருத்துவமனையில்'ரோபோடிக்' மூட்டு மாற்று சிகிச்சை திருப்பூரில் முதல் முறையாக அறிமுகம்

/

பாலா ஆர்த்தோ மருத்துவமனையில்'ரோபோடிக்' மூட்டு மாற்று சிகிச்சை திருப்பூரில் முதல் முறையாக அறிமுகம்

பாலா ஆர்த்தோ மருத்துவமனையில்'ரோபோடிக்' மூட்டு மாற்று சிகிச்சை திருப்பூரில் முதல் முறையாக அறிமுகம்

பாலா ஆர்த்தோ மருத்துவமனையில்'ரோபோடிக்' மூட்டு மாற்று சிகிச்சை திருப்பூரில் முதல் முறையாக அறிமுகம்


ADDED : ஜூலை 01, 2024 11:59 PM

Google News

ADDED : ஜூலை 01, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எதிரில் செயல்படும், பாலா ஆர்த்தோ மருத்துவமனையில், ஏ.ஐ., வசதியுடன் கூடிய ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மைய துவக்க விழா நேற்று நடந்தது.

மையத்தை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் திறந்து வைத்து பேசியதாவது:

பாலா மருத்துவமனையில் ஏ.ஐ., தொழிற்நுட்ப உதவியுடன் 'ரோபோடிக்' முறை சிகிச்சை கொண்டு வந்திருப்பது, திருப்பூர் மருத்துவ துறையில் ஒரு புரட்சி. பெரிய, பிரபல மருத்துவமனைகளுக்கு இல்லாத துணிவு, இம்மருத்துவமனைக்கு வந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இம்மருத்துவமனை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் தனி முத்திரை பதித்து வருகிறது; அதனால், மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.

இவ்வாறு, அவர் பேசினார்.

பாலா மருத்துவமனை நிறுவனர் பாலசுப்ரமணியம் பேசுகையில், ''15 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட எங்கள் மருத்துவமனையில், ஆயிரக்கணக்கானோருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம். அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். எங்கள் மீதுள்ள நம்பிக்கையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். திருப்பூரில் முதன் முறையாக, ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை துவங்கியுள்ளோம்; இதன் வாயிலாக, உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை வழங்க முடியும்'' என்றார்.

முன்னதாக, தெற்கு சரக காவல் உதவி கமிஷனர் நந்தனி, துணை மேயர் பாலசுப்ரமணியம், ஐ.எம்.ஏ., முன்னாள் தலைவர் பாரதி உட்பட பலர் பங்கேற்று பேசினர்.

---------------

திருப்பூர், தாராபுரம் ரோடு, பாலா ஆர்த்தோ மருத்துவமனையில், ரோபோடிக்ஸ் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மைய திறப்பு விழாவில், மேயர் தினேஷ்குமார், துணை துணைமேயர் பாலசுப்ரமணியம், போலீஸ் உதவி கமிஷனர் நந்தினி, பாலா மருத்துவமனை தலைவர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us