/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்க முகாம்; மீண்டும் நடத்த வலியுறுத்தல்
/
மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்க முகாம்; மீண்டும் நடத்த வலியுறுத்தல்
மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்க முகாம்; மீண்டும் நடத்த வலியுறுத்தல்
மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்க முகாம்; மீண்டும் நடத்த வலியுறுத்தல்
ADDED : ஜன 22, 2025 07:50 PM
உடுமலை; அரசுப்பள்ளிகளில் விடுபட்ட மாணவர்களுக்கான அஞ்சலக வங்கிக்கணக்குகள் துவங்குவதற்கு, சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே, ஆண்டுதோறும் இது தரப்படுகிறது. அந்த மாணவர்களுக்கு மட்டுமே, வங்கிக்கணக்கு பராமரிக்கப்பட்டு வந்தது.
நடப்பாண்டில் அனைத்து மாணவர்களுக்கும், வங்கிக்கணக்கு துவங்குவதற்கு அரசு அறிவித்துள்ளது. பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
இதன்படி வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, அஞ்சலக வங்கிக்கணக்கு துவங்குவதற்கு முகாம் கல்வியாண்டின் துவக்கத்தில் நடந்தது. உடுமலை சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில், இதற்கான சிறப்பு முகாம் ஜூன் மாதம் நடந்தது.
பள்ளிகளுக்கு அருகிலுள்ள கிளை தபால் நிலையங்களை அணுகி, அவர்கள் வாயிலாக கணக்கு துவங்கப்பட்டது. இவ்வாறு கணக்குகள் துவங்குவதற்கு, மாணவர்கள் பெற்றோருடன் அந்த முகாம் நாளில் பள்ளிக்கு வர வேண்டும். பெரும்பான்மையான பள்ளிகளில், பெற்றோர் வர இயலாத காரணம் மற்றும் இதர ஆவணங்கள் இல்லாமல், பல மாணவர்களுக்கு வங்கிக்கணக்குகள் துவங்குவது விடுபட்டுள்ளது. மேலும் சில பள்ளிகளில், மாணவர்கள் விடுப்பு எடுத்த காரணங்களாலும் விடுபட்டுள்ளது.
இத்தகைய மாணவர்களுக்கு, மறு வாய்ப்பு வழங்கும் வகையில், சிறப்பு முகாம் மீண்டும் நடத்த வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

