sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பனியன் ஊழியர் தற்கொலை; சரணடைந்த தம்பதி கைது

/

பனியன் ஊழியர் தற்கொலை; சரணடைந்த தம்பதி கைது

பனியன் ஊழியர் தற்கொலை; சரணடைந்த தம்பதி கைது

பனியன் ஊழியர் தற்கொலை; சரணடைந்த தம்பதி கைது


ADDED : ஆக 07, 2025 11:26 PM

Google News

ADDED : ஆக 07, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர், வளையங்காடு, வ.உ.சி., நகரை சேர்ந்தவர் தயாளன், 42. திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. குமார் நகரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் பேப்ரிக் பொறுப்பாளராக பணியாற்றி வந்தார்.

இவர் தான் பணியாற்றிய நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணியை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நிறுவனத் தரப்பில் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையறிந்து, தயாளன் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மனைவி தரப்பில், நிறுவனத்தினர், கணவனை அடித்து மிரட்டியதாக சொத்துகளை எழுதி வாங்கியதாக புகார் அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று திரும்பிய தயாளன் சில நாட்களில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்தார். புகாரின் பேரில், தற்கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக பனியன் நிறுவன உரிமையாளர் செல்வமுருகன், 32, மனைவி ரஞ்சிதா, 30 என, இருவரும் திருப்பூர் எஸ்.சி., / எஸ்.டி., கோர்ட்டில் சரணடைந்தனர். இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி சுரேஷ், அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து இருவரையும் அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us