sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று அக் ஷய நவமி நதியில் நீராடுவது சிறப்பு

/

இன்று அக் ஷய நவமி நதியில் நீராடுவது சிறப்பு

இன்று அக் ஷய நவமி நதியில் நீராடுவது சிறப்பு

இன்று அக் ஷய நவமி நதியில் நீராடுவது சிறப்பு


ADDED : நவ 10, 2024 04:28 AM

Google News

ADDED : நவ 10, 2024 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : 'அக் ஷய நவமி நாளான இன்று, ஜீவநதியில் நீராடி, இழந்த பதவிகளை பெறலாம்; பாவங்களை போக்கலாம்' என, தேசிய சிந்தனை பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,''கங்கை, காவிரி நதிகள், பூமிக்கு வந்த நாள், அக் ஷய நவமி; இன்று (10ம் தேதி), அக் ஷய நவமி தினம் என்பதால், புனித நதிகளில் நீராடுவது சிறப்பு.

ஐப்பசி மாத காவிரி ஆற்றில், துலாகட்டமான மயிலாடுதுறையில் புனித நீராடல் செய்வது புண்ணியம். விசாகம் நட்சத்திரம், 2வது பாதத்தில், ஏதாவது ஒரு கிரகம் இருக்க பிறந்தவர்கள், அவசியம் நன்னீராடல் செய்ய வேண்டும். கங்கை, காவிரியில் நீராட இயலாதவர்கள், அருகே உள்ள ஜீவநதியில் நீராடி இழந்த பதவிகளை பெறலாம்; பாவங்களை போக்கலாம்,'' என்று தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us