/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பட்டம்' வினாடி - வினா; 'பட்...பட்' என பதில் கூறி அபாரம்
/
'பட்டம்' வினாடி - வினா; 'பட்...பட்' என பதில் கூறி அபாரம்
'பட்டம்' வினாடி - வினா; 'பட்...பட்' என பதில் கூறி அபாரம்
'பட்டம்' வினாடி - வினா; 'பட்...பட்' என பதில் கூறி அபாரம்
ADDED : டிச 11, 2024 05:01 AM

திருப்பூர்; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி - வினா போட்டியில் மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டினர்.
கடந்த, 2018 முதல், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், 'வினாடி வினா' போட்டி நடத்தப்படுகிறது. புத்தக படிப்புடன் மாணவர்களுக்கு பொது அறிவு உள்ளிட்ட கற்றல் சார்ந்த தேடலை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர்களை தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் வகையிலும் இந்த இதழ் அமைந்திருப்பதால் மாணவர்கள் மத்தியில் இதை படிப்பதில் ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது.
போட்டி தேர்வு உட்பட பொது அறிவு சார்ந்த தேர்வுகளை எதிர்கொள்ள இந்த இதழ் உதவுகிறது.இந்தாண்டுக்கான வினாடி - வினா விருது, 2024 -'25 போட்டி, 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நடந்து வருகிறது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் கை கோர்த்துள்ளது. சத்யா ஏஜென்சிஸ் இணைந்து நடத்துகிறது.
இதில் பங்கேற்க கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளிகள் முன்பதிவு செய்துள்ளன; பள்ளிகள் தோறும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் இடையே அரையிறுதி போட்டி நடக்கும்.
இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதி போட்டி நடத்தப்பட இருக்கிறது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.
அவிநாசி - சேவூர் ரோடு, கச்சேரி வீதி, மாமரத்தோட்டம் பகுதியில் செயல்படும் பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.
தகுதி சுற்றுக்கான போட்டியில், 210 மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். அதிக மதிப் பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு இடையே வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.
மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில், 'டி' அணியில் இடம் பெற்ற, 8ம் வகுப்பு மாணவி அருணா, 6ம் வகுப்பு மாணவர் ரித்திக் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி யின் மூத்த முதல்வர் வித்யாசங்கர், பள்ளி ஆலோசகர் உமா மகேஸ்வரி, கல்வி ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை, பட்டம் வினாடி-வினாடி ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.