/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சியில் கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை
/
ஊராட்சியில் கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை
ADDED : ஜன 09, 2024 08:40 PM
உடுமலை;துங்காவி ஊராட்சியில் திட்டப்பணிகளில் கட்டுமான பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது.
துங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட உடையார்பாளையத்தில், பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. குறிப்பாக, 7.23 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைத்தல்; 4.36 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏற்கனவே உள்ள ஆழ்குழாய் கிணறுக்கு, புதிய 7 எச்.பி., மோட்டார் மற்றும் பைப் லைன் அமைத்தல்; தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் 6.65 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.
இப்பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டினார். உடுமலை வடக்கு ஒன்றிய செயலாளர் காளீஸ்வரன், துங்காவி ஊராட்சித்தலைவர் உமாதேவி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

