ADDED : பிப் 10, 2025 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்: டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றியை திருப்பூர் மாநகராட்சி முதல் வார்டு பா.ஜ.,வினர் நேற்று கொண்டாடினர்.
செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி, வார்டு தலைவர் நாராயணன், மண்டல செயற்குழு உறுப்பினர்கள் சுந்தரம், மூர்த்தி, காளீஸ்வரன், மணி கிளை தலைவர்கள் மற்றும் மண்டல நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

