ADDED : ஆக 17, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; நம்பியாம்பாளையத்தை சேர்ந்த கதிரேசன் மகன் ரோகித், 16; ஒன்பதாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்துவந்தார்.
நேற்று மதியம் கதிரேசனும் அவரது மனைவியும் திருப்பூருக்கு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது ரோகித் தனது நண்பர்களுடன் கருவலுார் அருகே மருதுாரில் உள்ள பண்ணை நீர் குட்டையில் குளிக்க சென்றுள்ளார். நீரில் மூழ்கி பலியானார். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.