sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 நிழற்குடை பொலிவானால் பயணிகளுக்கு பாதுகாப்பு

/

 நிழற்குடை பொலிவானால் பயணிகளுக்கு பாதுகாப்பு

 நிழற்குடை பொலிவானால் பயணிகளுக்கு பாதுகாப்பு

 நிழற்குடை பொலிவானால் பயணிகளுக்கு பாதுகாப்பு


ADDED : டிச 01, 2025 05:49 AM

Google News

ADDED : டிச 01, 2025 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையத்தை சுற்றி கிருஷ்ணாபுரம், வதம்பச்சேரி, வடுகபாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து, வேலை, வியாபாரம் என, பல்வேறு பணிகளுக்காக திருப்பூர், பல்லடம், பொள்ளாச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர், தினசரி, காமநாயக்கன்பாளையம் வந்து பஸ் ஏறுகின்றனர்.

பயணிகள் வசதிக்காக, இப்பகுதியில் கட்டப்பட்ட நிழற்குடை, போதிய பராமரிப்புகள் இன்றி, புல் பூண்டுகள் முளைத்தும், துாசி படிந்தும் பாழாகி கிடக்கிறது. நிழற்குடை கைவிடப்பட்டதால், பஸ் ஸ்டாப்பும் நால் ரோட்டுக்கு மாறியது. பஸ்சுக்கு காத்திருக்கும் பொதுமக்கள், மழை, வெயிலுக்கு ஒதுங்க இடம் இன்றி கடைகளில் தஞ்சமடைவதுடன், விபத்து அபாயத்துக்கு இடையே, ரோட்டில் நின்றுதான் பஸ் ஏறுகின்றனர்.

நால் ரோட்டில் வாகனங்கள் தாறுமாறாக வந்து செல்லும் நிலையில், பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.

நிழற்குடையை முறையாகப் பராமரிக்காததால், பஸ் ஸ்டாப் இடம் மாறியதுடன், பொதுமக்களும் ரோட்டுக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us