/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குண்டும், குழியுமாக மாறியுள்ள ரோடுகள்; அதிகரிக்கும் விபத்துக்கள்
/
குண்டும், குழியுமாக மாறியுள்ள ரோடுகள்; அதிகரிக்கும் விபத்துக்கள்
குண்டும், குழியுமாக மாறியுள்ள ரோடுகள்; அதிகரிக்கும் விபத்துக்கள்
குண்டும், குழியுமாக மாறியுள்ள ரோடுகள்; அதிகரிக்கும் விபத்துக்கள்
ADDED : நவ 12, 2024 05:35 AM
உடுமலை ; உடுமலை நகர பகுதியிலுள்ள பிரதான ரோடுகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
உடுமலை நகர பகுதியிலுள்ள ரோடுகளில், மழை நீர் தேக்கம் காரணமாகவும், முறையான பராமரிப்பு இல்லாததாலும், பெரும்பாலான ரோடுகள், குண்டும், குழியுமாக மாறி காணப்படுகின்றன.
பஸ் ஸ்டாண்டிலிருந்து, பொள்ளாச்சி செல்லும் ரோடு, பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல், முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.
மழை காலங்களில், குழிகளில் நீர் தேங்கியிருப்பது தெரியாமல், வாகனங்களில் வருவோர் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.
அதேபோல், நகர எல்லை வரை, பழநி ரோடு மற்றும் கொழுமம் ரோட்டில், பல இடங்களில் ரோடுகள் சேதமடைந்துள்ளன.
பாதாளச்சாக்கடை ஆளிறங்கும் குழிகளின் மூடிகள், ஒரு சில பகுதிகளில் உடைந்து, தாழ்வாகவும், பெரும்பாலான இடங்களில் உயரமாகவும் உள்ளதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
மேலும், தாராபுரம் ரோட்டிலும் பெரும்பாலான பகுதிகளில், பெரிய அளவிலான குழிகள் ஏற்பட்டுள்ளன.
திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு, தளி ரோடு என நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள ரோடுகள் மட்டுமின்றி, ராமசாமி நகர் ரோடு, சீனிவாசா வீதி, கல்பனா ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு என நகராட்சி பராமரிப்பிலுள்ள பெரும்பாலான ரோடுகளும், பல ஆண்டுகளா பராமரிக்காமல், சேதமடைந்துள்ளன.
இந்த ரோடுகளால், போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் ஏற்படும் நிலையில், மழை காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, தேசிய நெடுஞ்சாலை, உடுமலை, மடத்துக்குளம் உபகோட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள், குண்டும், குழியுமாக மாறியுள்ள ரோடுகளை, உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.